ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாட்டம்
எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி;
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி நெல்லை மாநகர மாவட்டத்தின் சார்பில் டவுனில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மருத்துவ அணி மாவட்ட தலைவர் போத்தீஸ் முகமது பாபு தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவினை பரிமாறி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தனர்.