ஆர்டி மலையில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை
ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்;
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி மலை ஸ்ரீ விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் தை மாத மாட்டுப் பொங்கல் முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடைபெற்றது பிறகு கோவில் வெளியே நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு திரவியங்களால் பூஜை செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஸ்ரீ கந்தசுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் வேதரத்தினசிவம் செய்திருந்தனர்.