அரசால் தடை செய்யப்பட்ட 1 கிலோகிராம் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது
கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும்.;
பெரம்பலூர் மாவட்டம் அனுக்கூர் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 1 கிலோகிராம் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் தனிப்படையினர் நடத்திய சோதனையில் மங்களமேடு உட்கோட்டம் மங்களமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனுக்கூர் கிராமத்தில் ராணி 58/25 க/பெ ஜெயசந்திரன், அனுக்கூர், வேப்பந்தட்டை வட்டம், பெரம்பலூர் மாவட்டம். என்பவர் தனது பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் தனிப்படையினர் மேற்படி எதிரியை கைது செய்து மங்களமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மங்களமேடு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் இளவரசன் மேற்படி எதிரி மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து ஹான்ஸ் (50 பாக்கெட் - 1kg) எடையுள்ள 500 ரூபாய் மதிப்புள்ள* குட்கா பொருட்களை பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.