தூத்துக்குடி 1வது ரயில்வே தற்காலிகமாக மூடல்: தெற்கு ரயில்வே தகவல்!

தூத்துக்குடியில் அவசர பராமரிப்பு பணிக்காக 1வது ரயில்வே கேட் நாளை (செப்.9) இரவு 10 மணி முதல் முதல் 2 நாட்கள் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-09-09 10:59 GMT
தூத்துக்குடியில் அவசர பராமரிப்பு பணிக்காக 1வது ரயில்வே கேட் நாளை (செப்.9) இரவு 10 மணி முதல் முதல் 2 நாட்கள் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில், மட்டகடை மற்றும் டபிள்யூஜிசி சாலையை இணைக்கும் 1வது கேட்டில் அவசர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 09.09.2025 அன்று இரவு 10 மணி முதல் 10.09.2025 அன்று காலை 05:00 மணி வரை மூடப்படும். மேலும், 10ம் தேதி இரவு 10 மணி முதல் 11ம் தேதி காலை 5 மணி வரை மூடப்படும். எனவே, வான ஓட்டிகள் சாலை போக்குவரத்தை அருகிலுள்ள சர்வீஸ் சாலையை பயன்படுத்த வேண்டும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News