தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமாா். இவரை முன்விரோதம் காரணமாக 2024-ம் ஆண்டு தீபக் என்பவர் கத்தியால் குத்தி உள்ளார். அவரை போலீசார் கைது செய்த நிலையில் இந்த வழக்கு விசாரணை தேனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (பிப்.28) தீபக்குக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கோபிநாதன் தீா்ப்பளித்தார்