காஞ்சி ரவுடி வசூல்ராஜா கொலை வழக்கு 10 பேர் கைது

காஞ்சி ரவுடி வசூல்ராஜா கொலை வழக்கு 10 பேர் கைது: 4 பேருக்கு 'மாவுக்கட்டு' 5 கல்லுாரி மாணவர்களுக்கும் தொடர்பு;

Update: 2025-03-19 07:31 GMT
காஞ்சிபுரம், மாமல்லன் நகரைச் சேர்ந்தவர் ராஜா என்கிற வசூல்ராஜா, 38. இவர் மீது, கொலை வழக்கு உட்பட, 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 'ஏ பிளஸ்' ரவுடியாக வலம் வந்தார். கடந்த 11ம் தேதி பகல் 12:00 மணிக்கு, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர், அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர். இதில் நிலை தடுமாறி விழுந்த வசூல்ராஜாவை, கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இது குறித்து விசாரித்த காஞ்சி தாலுகா போலீசார், திருமால்பூர் ரயில் நிலையம் அருகே பதுங்கி இருந்த கொலையாளிகள் பரத், 20, சிவா, 19, திலீப்குமார், 19, சூர்யா, 19, சுரேஷ், 21, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களில், பரத், சிவா, திலீப்குமார் ஆகியோர், தப்பியோட முயன்றபோது கீழே விழுந்ததில், கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும், வாலாஜாபாத் வெண்குடி அருகே பதுங்கியிருந்த ஜாகீர் உசேன், 25, சுல்தான், 32, ஆகியோரை பிடிக்க முயன்றபோது, தப்பிக்க முயன்று தவறி விழுந்த ஜாகீர் உசேனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சுல்தானை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இக்கொலையில் கல்லுாரி மாணவர்களுக்கு பெரும் பங்கு உள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது.

Similar News