என்டிபிஎல் அனல்மின் நிலைய ஊழியர்கள் 10வது நாளாக போராட்டம்
தூத்துக்குடியில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்டிபிஎல் அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் இன்று 10வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.;
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் 300 பெண் ஊழியர்கள் என சுமார் 1350 பேர் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா்களுக்கு, நெய்வேலி என்எல்சி ஒப்பந்த ஊழியா்களைப் போன்று ஊதிய உயா்வு அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிா்த்து நிா்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுத்து மேல்முறையீடு செய்துள்ள நிா்வாகத்தைக் கண்டித்து கடந்த 17ஆம் தேதி இரவு முதல் என்டிபிஎல் ஒப்பந்த ஊழியா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். இது தொடா்பாக என்டிபிஎல் நிா்வாகத்துடன் தொழிற்சங்கத்தினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று 10வது நாளாக என்டிபிஎல் நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் காரணமாக அனல்மின் நிலையத்தில் சுமார் 750 மெகா வாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 21 தற்காலிக ஊழியர்கள் மட்டும் ஆலைக்குள் செல்ல போராட்ட குழுவினர் அனுமதி அளித்துள்ளதாகவும், இப்போராட்டம் விரைவில் மாநில அளவில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு செயலாளர் அப்பாத்துரை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.