பள்ளிபாளையம் அருகே 13 அடி விநாயகர் சிலை பறிமுதல்

பள்ளிபாளையம் அருகே 13 அடி விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-09-08 01:46 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே 13 அடி விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம் துறையூர் விநாயகர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த வட்ராம்பாளையம் பகுதியில் சிலை தயாரிப்பு கூடத்தில் இருந்து 13 அடி உயர விநாயகர் சிலையை டாட்டா ஏசி வாகனத்தில் எடுத்துக் கொண்டு சென்றனர். சிலையின் உயரம் அதிகமாக இருந்ததால் செல்லும் வழியில் மின்சார வயர்கள் தடுத்ததால் அவர்கள் மெதுவாக வாகனத்தை ஓட்டி சென்றனர் ஆனங்கூர் ரயில்வே கேட்பகுதியில் சென்ற பொழுது சிலை செல்ல முடியாததால், அவ்வழியாக வந்த டி.எஸ்.பி. இமயவரம்பன், சிலையின் உயரத்தை பார்த்து உடனடியாக பள்ளிபாளையம் காவல் ஆய்வாளருக்கு தகவல் அளித்து, அந்த சிலையை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதன் பேரில் பள்ளிபாளையம் போலீசார் விநாயகர் சிலையை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலை வருவாய் துறை தோழியுடன் குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சிலையை பெற்று கொண்டாட்டத்தில் இருக்க வேண்டிய இளைஞர்கள் இரண்டு நாட்களாக உணவு இன்றி சிலையை எடுத்துச் செல்ல முடியாமல் தவித்த நிலையில் தற்பொழுது போலீசார் சிலையை பறிமுதல் செய்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Similar News