வருகிற 15 -ம் தேதிக்குள் விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண்

பெற நாகை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்;

Update: 2025-04-14 12:03 GMT
நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும், ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு தளத்தில் விவசாயிகளின் நில விவரங்களை பதிவு செய்ய, தங்கள் நில ஆவணங்கள் (கணினி சிட்டா, பட்டா), ஆதார் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசியுடன் சென்று வருகிற 15 -ம் தேதிக்குள் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு, இனி வரும் காலங்களில் பிரதம மந்திரி கௌரவ நிதித் திட்டத்தில், 20-வது தவணைத் தொகை வரவு வைக்கப்பட மாட்டாது. எனவே, விவசாயிகள் இறுதி நாள் வரை காத்திருக்காமல், தங்கள் நில விவரங்களை பதிவு செய்து அடையாள எண் பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News