அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 174 மிதிவண்டி

மணல்மேடு அரசினர் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 174 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.எம்எல்ஏ ராஜகுமார் வழங்கினார்

Update: 2024-08-13 11:21 GMT
. மாணவ, மாணவிகளுக்கு பயன்பெறும் வகையில் அரசு அறிவித்த திட்டத்தின் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து மணல்மேடு அரசினர் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் கலந்து கொண்டு 174 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர், சாலையில் செல்லும் போது மாணவ மாணவிகள் கவனமாக செல்ல வேண்டும், மிதி வண்டியில் பள்ளிக்கு வரும்போது உடற்பயிற்சியாகவும், உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும், உடல் வலிமையாக இருந்தால் மூளையும் சுறுசுறுப்பாக இருக்கும், நல்ல அறிவுத்திறன் வளரும் என மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவர் கண்மணி அறிவு வடிவழகன், தலைமை ஆசிரியர்கள் ஜான்சி ஆரோக்கிய மேரி, ராமமூர்த்தி, மற்றும் காங்கிரஸ், திமுக கவுன்சிலர்கள், ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Similar News