ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் 18.ம்.ஆண்டாக 108, கலச பூஜை மற்றும் சுமங்கலி பூஜை நடைபெற்றது...
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் 18.ம்.ஆண்டாக 108, கலச பூஜை மற்றும் சுமங்கலி பூஜை நடைபெற்றது...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்களில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். அதன்படி கார்த்திகை மாதம் உத்திரம் நட்சத்திரம் முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் பதினெட்டாம் ஆண்டாக 108 கலச பூஜை மற்றும் சுமங்கலி பூஜை விழா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பின்னர் ஸ்ரீ லட்சுமி கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்த கலச மற்றும் சுமங்கலி பூஜையில் கலந்து கொள்வதால் சகல தோஷ நிவர்த்தி, திருமண தடை நீக்கும் ,புத்திர பாக்கியம் கிடைக்கும், நாக தோஷம் ,செவ்வாய் தோஷம் நீங்கும், தொழில் அபிவிருத்தி, கல்வி உயர்வு ஏற்படும் என ஐதீகம்.. எனவே இதில் ஏராளமான பெண்கள், ஆண்கள் என பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த சிறப்பு அலங்காரத்தை கோவில் பூசாரிகள் எஸ். செல்வம் எஸ். சந்துரு, சண்முகம், மணி, ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.