அரிவாள், வாளுடன் ரீல்ஸ் பதிவு: 2 இளைஞர்கள் கைது

சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக அரிவாள், வாளுடன் ரீல்ஸ் பதிவிட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-09-24 17:02 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாள் மற்றும் வாளுடன் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் இரண்டு இளைஞர்கள் பதிவிட்டனர். இது குறித்து ஆறுமுகனேரி ஆய்வாளர் சேக் அப்துல் காதர் தலைமையில் உதவி ஆய்வாளர் வாசுதேவன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் காயல்பட்டினம் பரிமார் தெருவை சேர்ந்த மீராஷா மரைக்காயர் மகன் சேகு நூர்தீன் (24), சுனாமி காலனியை சேர்ந்த சகாப்தீன் மகன் முத்து மொகுதூம் என்ற ஆசிஃப் அலி ­(19) ஆகியோர் ரீஸ் பதிவிட்டது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்து அரிவாள், வாள், இரண்டு கைப்பேசிகளை பறிமுதல் செய்தனர். இவர்களில் சேகு நூர்தீன் மீது ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Similar News