காரில் வந்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் காரில் வந்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 2 வாலிபர்கள் கைது, பணம், நகை, வெள்ளி பொருட்கள் பறிமுதல்

Update: 2024-10-01 19:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி காரில் வந்து சுப்பிரமணி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணம், வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக நகர் மேற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் ASP. சிபின் மேற்பார்வையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையில், சார்பு ஆய்வாளர் மலைச்சாமி, நகர் குற்றத் தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் திருட்டில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த குமரேசன் வயது 40, அழகர் வயது 40 ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடித்த ரூ.1 லட்சம் பணம், 1 பவுன் தங்க நகை, 1/2 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News