கோபி அருகே சேவல்கள் திருடிய 2 பேர் சிக்கினர்

கோபி அருகே சேவல்கள் திருடிய 2 பேர் சிக்கினர்

Update: 2024-10-19 05:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோபி அருகே சேவல்கள் திருடிய 2 பேர் சிக்கினர் கோபி அருகே உள்ள ஆண்டிபாளையம் சானார் புதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44). இறைச்சி கடை வைத்து உள்ளார். சம்பவத்தன்று இவரது வீட்டின் பின் புறம் உள்ள தகர செட்டில் இருந்து சேவல் அலறும் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்து உள்ளார். அப்போது 2 பேர் 2 சேவல் களை திருடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், அந்த 2 பேரையும் பிடித்து கடத்தூர் போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஆண்டிபாளையத்தை சேர்ந்த பிரபு (19), மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சேவல்கள் திருடியதாக அந்த 2பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News