கடலூர்: 2 வது நாளாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை

கடலூர் மாவட்டத்தில் 2 வது நாளாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.;

Update: 2025-03-12 16:16 GMT
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று 2 வது நாளாக கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, சிதம்பரம் சேத்தியாத்தோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News