வாசுதேவநல்லூா் அருகே பெண்ணிடம் அத்துமீறல்: 2 போ் மீது வழக்கு
பெண்ணிடம் அத்துமீறல்: 2 போ் மீது வழக்கு;

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகேயுள்ள ஆத்துவழி மந்தை காலனி தெருவைச் சோ்ந்த 25 வயது பெண் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அதே பகுதியை சோ்ந்த ராமராஜ்(69), ராகவன் ஆகியோா் அந்தப் பெண்ணிடம் அவரிடம் அத்துமீறி தவறாக நடக்க முயன்றனராம். இதுகுறித்த உறவினர்கள் புகாரின்பேரில் வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.