சேலம் 3 ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகள் மோகனபிரியா (வயது 19). இவர் சேலம் அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் அதன் பிறகு மாயமாகி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர். இதே போன்று சேலம் ரெட்டியூரை சேர்ந்தவர் லோகநாதன். இவருடைய மகள் சன்மதி (19). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.