அரசு ஊழியர் வீட்டில் 20பவுன் நகை திருடிய இருவர் கைது!
தூத்துக்குடியில் அரசு பேருந்து டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
தூத்துக்குடி கங்கா பரமேஸ்வரி காலனியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (57) இவர் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பூமாரி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் சக்தி மாலா கோயம்புத்தூரில் கல்லூரியில் படித்து வருகிறார். ராமகிருஷ்ணன் தனியாக வசித்து வந்தார். கடந்த 16ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றவர் பின்னர் 17ஆம் தேதி காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 23.5 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு 20 லட்ச ரூபாய் ஆகும். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் ேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார் விசாரணையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கார்த்திகைபுரம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் (38), தூத்துக்குடியை சேர்ந்த பேரின்ப நாதன் (21) ஆகிய 2 பேரும் நகைகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து 20 பவுன் நகைகளை மீட்டனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.