பெரியகுளம் தென்கரை மார்க்கெட் பகுதியில் 65 வயது முதியவர் காய்கறி விற்பனை செய்தார். ஒருவர் ரூ.40 காய்கறி வாங்கி, ரூ.200 கள்ளநோட்டுடன் கொடுத்தார். முதியவர் ரூ.160 பாக்கி கொடுத்து உள்ளார். பின்னரே அது கள்ளநோட்டு என தெரிந்தது. இதேபோல் வடகரை டீக்கடையிலும் இதுபோல் ஒரு சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன் நிகழ்ந்துள்ளது.