பிரம்மரிஷி மலையில் 2,100மீட்டர் திரி கொண்டு கார்த்திகை மகா தீபம்

கார்த்திகை மகா தீபம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை தீபமானஇன்று 43 ஆம் ஆண்டு கார்த்திகை தீப திருவிழா பிரம்மரிஷி மலை சித்தர்கள் சார்பாக கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. பிரம்மரிஷி மலையில் 5அடி செப்பு கொப்பரை கொண்டு 2,100 மீட்டர் 3 ஆயிரத்து எட்டு லிட;

Update: 2025-12-04 07:13 GMT
பெரம்பலூர் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் 2,100மீட்டர் திரி கொண்டு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. பெரம்பலூர் எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருநான்று கார்த்திகை மகா தீபம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை தீபமானஇன்று 43 ஆம் ஆண்டு கார்த்திகை தீப திருவிழா பிரம்மரிஷி மலை சித்தர்கள் சார்பாக கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. பிரம்மரிஷி மலையில் 5அடி செப்பு கொப்பரை கொண்டு 2,100 மீட்டர் 3 ஆயிரத்து எட்டு லிட்டர் எண்ணெய் நெய்மற்றும் 108 கிலோ கற்பூரம் கொண்டு அரோகரா கோஷத்துடன், பூதகண, கைலாச வாத்தியங்கள் முழங்க, சித்தர்கள் யாகத்துடன் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து பிரம்மரிஷி மலையில் வண்ண வான வெடிக்கையும் வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரம்மரிஷி மலையின் அடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பிரம்மரிஷி மலை கார்த்திகை தீபத்தில் சுற்று வட்டர கிராமத்தில் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மகாதீப தரிசனம் செய்தனர்.

Similar News