ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி நடத்தும் அறம் 24 பட்டமளிப்பு விழா

ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி நடத்தும் அறம் 24 பட்டமளிப்பு விழா

Update: 2024-08-14 07:32 GMT
ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி நடத்தும் அறம் 24 பட்டமளிப்பு விழா
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நடத்தும் அறம் 24 பட்டமளிப்பு விழா நேற்று மேல்மருவத்தூர் அருள்திரு அடிகளார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவகல்லூரியில் M.B.B.S M.D/M.S மற்றும் படித்த மாணவர்களுக்கு “அறம் 24” பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் ஆதிபராசக்தி நிறுவனங்களின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் ஆலோனைபடி தலைமையில் ஆதிபராசக்தி கல்வி மருத்துவப் பண்பாடு அறநிலையின் துணைத்தலைவரும் மருத்துவகல்லூரியின் தாளாளருமான கோ.ப. அன்பழகன் தலைமை வகித்தார்,தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் கே.நாராயணசாமி,ஊரக வளர்ச்சிதுறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையர் டாக்டர் அனந்தகுமார் I.A.S, சிறப்புறையாற்றி மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்கள். இவ்விழாவில் இளங்கலை M.B.B.S பயின்ற மாணவ / மாணவிகள் (2017 2018) பிரிவை சேர்ந்தவர்கள். மற்றும் முதுகலை (M.D / M.S) (2020-2021) பிரிவை சேர்ந்த தேர்ச்சி பெற்ற MBBS 158 M.D / M.S 30, மொத்தம் 188 மாணவ / மாணவிகளுக்கு டாக்டர் கே. நாராயணசாமி மற்றும் டாக்டர் ஆர். அனந்தகுமார் I.A.S, சான்றிதழ் வழங்கினார்கள், இவ்விழாவில் ஆதிபராசக்தி அறநிலையின் துணைத்தலைவர் கோ.ப. செந்தில்குமார், ஆதிபராசக்தி மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ரமேஷ், ஆதிபராசக்தி பாராமெடிக்கல் கல்லூரிகளின் தாளாளர் டாக்டர்ஸ்ரீலேகா செந்தில்குமார், ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி செயலாளர் டாக்டர் மதுமலர் பிரசன்ன வெங்கடேஷ்,டாக்டர் பிரசன்ன வெங்கடேஷ், ஆதிபராசக்தி அறநிலையின் முதன்மை செயல் அலுவலர் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத்தின் துணைத்தலைவர் வழக்கறிஞர் அ.ஆ. அகத்தியன்,மற்றும் டாக்டர் ஷாலினி அகத்தியன், ஆகியோர் கலந்துகொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர். மருத்துவகல்லூரியின் முதல்வர் டாக்டர்கண்ணன், மருத்துவமனையின் கண்கானிப்பாளார் டாக்டர் ரேகா, மற்றும் மருத்துவகல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி லிங்கநாதன் அனைத்து துறையின் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். இவ்விழாவில் மாணவ மாணவிகளுடன் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Similar News