தாராபுரத்தில் வாகன சோதனையில் 25 கிலோ குட்கா பறிமுதல்

தாராபுரத்தில் வாகன சோதனையில் 25 கிலோ குட்கா பறிமுதல்

Update: 2024-09-27 08:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தாராபுரத்தில் வாகன சோதனையில் 25 கிலோ குட்கா பறிமுதல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வளையக்கார தெருவை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா இவரது மகன் முகமது யாசின் வயது 30. தாராபுரம் போலீசாருக்கு குட்கா திருட்டு நடைபெறுவதாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் தாராபுரம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரெட்டார வலசு பிரிவு அருகே தாராபுரம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஆல்டோ காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் தாராபுரம் பகுதியில் விற்பனை செய்வதற்காக எடுத்து வரப்பட்டு காரில் 25 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. இதை எடுத்து காவல்துறையினர் தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் முகமது யாசிக் என்பவர் ஆல்டோ காரில் 25 கிலோ குட்காவை கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து தாராபுரம் காவல் ஆய்வாளர் விஜய சாரதி தலைமையில் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் குற்றவாளியை காவல்துறையினர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Similar News