சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால் ரூ.25 ஆயிரம் அபராதம்

சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார் -;

Update: 2025-08-26 12:52 GMT
அரியலூர், ஆக.26 - அரியலூர் மாவட்டத்தில், சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்தது:அரியலூர் மாவட்டத்திலுள்ள சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.மேலும் வாகன உரிமையாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் வதிக்கப்படும். வாகனத்தை இயக்கிய சிறுவர்களுக்கு அவர்களது 25 வயது நிரம்பும் வரை ஓட்டுநர் உரிமம் பெற தடை வதிக்கப்படும். இயக்கப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கோ, பெற்றோருக்கோ சிறைத் தண்டனை விதிக்கப்படும்.எனவே  அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், இரு சக்கர வாகனங்கள் அல்லது நான்கு சக்கர வாகனங்கள் இயக்குவதை தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Similar News