இரிடியம் மோசடி குறித்து கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

இரிடியம் மோசடி குறித்து கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

Update: 2024-08-20 11:55 GMT
இரிடியம் மோசடி குறித்து கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது சத்தியமங்கலம் அடுத்த, சிக்கரசம்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (43) இவருரிடம் சத்தி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் பாண்டியன் இவரது நண்பர்கள் கரட்டூரைச் சேர்ந்த ஜீனத் குமார், கொமராபாளையத்தை சேர்ந்த பிரபு, மற்றும் அன்னுரைச் சேர்ந்த கார்த்திக் இவர்கள் நான்கு பேரும் சுப்பிரமணியத்தை தொடர்பு கொண்டு தங்களிடம் ரூ 1 கோடிக்கும் மேல் விலை போக கூடிய இரிடியம் சொம்பு இருப்பதாகவும் அதை விற்று கொடுத்தால் கமிஷன் தருவதாகவும் கூறியுள்ளனர். சுப்பிரமணி இது குறித்து பலரையும் தொடர்பு கொண்ட போது அவர்கள் பொருளை பார்த்து உன்மையை தெரிந்து கொண்டு பேசு மாறு கூறியுள்ளனர். 4 பேரை தொடர்பு கொண்ட சுப்பிரமணி சொம்பை பார்க்க வேண்டும் என கேட்டதற்கு பாண்டியன் பணம் 10 ஆயிரம் கொடுத்தால் பொருளை காட்டுவதாக கூறியுள்ளார் . சுப்பிரமணி ரூ 10 ஆயிரத்தை கொடுத்தும் சொம்பை காட்டாமல் இருந்துள்ளனர். தொடர்ந்து கேட்டதற்கு கொமரபாளையம், தவளகிரி முருகன் கோவில் அருகே நேற்று வருமாறு கூறியுள்ளனர். தனது நண்பருடன் அங்கு சென்ற போது 3 பேர் இருந்துள்ளனர். கார்த்தி எங்கே என கேட்டதற்கு வெளியூர் சென்று விட்டார் என்றும் கூறி ஒரு பையை கொடுத்துள்ளனர். சுப்பிரமணி பையில இருக்கும் சொம்பு இரியமா என சோதனை செய்த போது அது டூப்ளிகேட் சொம்பு தான் என கூறியுள்ளனர். அவர் உடனே பணத்தை திருப்பி கொடுத்து விடுங்க இல்லைனா வெளியில் சொல்வேன் என சொன்னதற்கு பாண்டியன் கத்தியை காட்டி மிரட்டி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். உடனே சுப்பிரமணி பையை கொடுத்து விட்டு சத்தி போலீஸ் ஸ்டேஷனில் இரிடம் மோசடி குறித்து . புகார் கொடுத்தார். சத்தி போலீஸார் 3 பேரை பிடித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கார்த்தியை தேடி வருகின்றனர்.

Similar News