மணல் கடத்திய 3 பேர் கைது

குற்றச் செய்திகள்

Update: 2024-09-29 03:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இலுப்பூர்: அன்னவாசல் அருகே பிள்ளையபட்டி பகுதியில் மணல் கடத்தல் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் எஸ்பியின் தனிப்படை போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மணல் அள்ளி கடத்த முயன்ற 2 டிப்பர் லாரிகள் உட்பட 3 வாகனங்கள், 8 யூனிட் மணல், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மணல் கடத்தலில் ஈடுபட்ட ஆலங்குடி மேட்டுப்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (38), பெருமாநாடு பன் னீர்செல்வம்(48),. ராமநாதபுரம் மாவட்டம் பேராவூரை சேர்ந்த தமிழ்மணி(34) ஆகிய 3 பேரை கைது செய்து அன்னவாசல் போலீசில் ஒப்படைத்தனர்.

Similar News