கொண்டலாம்பட்டி அருகே மது விற்ற 3 பேர் கைது

போலீசார் நடவடிக்கை;

Update: 2025-04-28 10:36 GMT
சேலம் கொண்டலாம்பட்டி போலீசார் பெரிய புத்தூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற பெரியதாய் (வயது 70), இச்சிமரத்து காட்டை சேர்ந்த வசந்தா (68), சந்தியூர் அம்மாபாளையத்தை சேர்ந்த ராஜ்கமல் (34) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News