வாணியம்பாடி அருகே மின்சார மின்மாற்றியை கழற்றி சுமார் 3 லட்சம் மதிப்பிலான காபார்களை திருடி சென்ற மர்ம கும்பல்.

வாணியம்பாடி அருகே மின்சார மின்மாற்றியை கழற்றி சுமார் 3 லட்சம் மதிப்பிலான காபார்களை திருடி சென்ற மர்ம கும்பல்.;

Update: 2025-07-24 09:22 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மின்சார மின்மாற்றியை கழற்றி சுமார் 3 லட்சம் மதிப்பிலான காபார்களை திருடி சென்ற மர்ம கும்பல். 15 மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம்யின்றி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அவதி. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அலந்தாபுரம் கிராமத்தில் உள்ள பெரியகொல்லி வட்டம் பகுதியில் வழக்கறிஞர் தேவகுமார், அருள், சக்கரவர்த்தி, ஞானசேகர், சுந்தரம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலங்களுக்கு மின்சாரம் செல்ல அங்கு மின் மாற்றி பொருத்தப் பட்டுள்ளது. மேலும் அந்த மின் மாற்றியில் சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் மின்சாரம் செல்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் மின்சாரம் தடை செய்து மின்மாற்றியை கழற்றி கீழே வைத்து அதில் இருந்த சுமார் ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான காப்பர் பொருட்களை எடுத்துகொண்டு இரும்பு பொருட்களை விவசாய நிலத்தில் வீசி சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு 9 முதல் அங்குள்ள வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை விவசாயிகள் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்று பார்த்த போது மின்மாற்றி பொருட்கள் விவசாய நிலத்தில் சிதறி கிடபப்து குறித்து மின்சாரதுறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் அம்பலூர் மின்வாரிய உதவி பொறியாளர் சத்திய மூர்த்தி திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் மின்சார துறை உதவி பொறியாளர் சத்திய மூர்த்தி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர்கள் அங்கு மின்சாரத்தை துண்டித்து மின்மாற்றியில் இருந்த ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிலான. ஆயிலை கீழே ஊற்றி காப்பர் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் நேற்று இரவு 9 மணி முதல் தற்போது வரை விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் மற்றும் வீடுகளில் மின்சாரம் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர், அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கடந்த 6 மாதத்திர்கு முன்பு ஸ்டாட்டர்கள் , கேபிள் ஒயர்கள் துண்டிக்கப்பட்டு கொள்ளையடித்து சென்றதாகவும், இது குறித்து திம்மம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Similar News