வத்திராயிருப்பு அருகே நல்லதங்காள் கோயில் சிலை உடைக்கப்பட்ட நிலையில் புதிய சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்த அறநிலைத்துறை அனுமதி தர கோரி கிராம மக்கள் 300 க்கும் மேற்பட்டோர் ஆர்

வத்திராயிருப்பு அருகே நல்லதங்காள் கோயில் சிலை உடைக்கப்பட்ட நிலையில் புதிய சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்த அறநிலைத்துறை அனுமதி தர கோரி கிராம மக்கள் 300 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் ...*;

Update: 2025-07-05 10:00 GMT
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே நல்லதங்காள் கோயில் சிலை உடைக்கப்பட்ட நிலையில் புதிய சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்த அறநிலைத்துறை அனுமதி தர கோரி கிராம மக்கள் 300 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் ... விருதுநகர் மாவட்டம்  வத்திராயிருப்பு அருகே  அர்ச்சுனாபுரத்தில் அமைந்துள்ளது நல்லதங்காள் கோயில்.   தமிழக பெண்களின் கலாச்சாரத்திற்கும்,  அண்ணன் தங்கை உறவிற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய நல்லதங்காள்,  அவர் வாழ்ந்த 15-ம் நூற்றாண்டில் நாட்டில் நிலவிய கடும் பஞ்சம் காரணமாக பசியால் துடித்த தனது ஏழு பிள்ளைகளையும் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தானும் அந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.    அவர் தற்கொலை செய்து கொண்ட கிணறு அவர் தங்கிய  இடம் ஆகியவை நினைவுச் சின்னமாகவும் கோயிலாகவும் எழுப்பப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வருகிறது.   அக்கோயிலில் நல்லதங்காள் பத்திரகாளியம்மன் வடிவில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். தமிழகம் முழுவதிலும் இருந்தும் குழந்தை வரம் வேண்டி ஏராளமானோர் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.  நெல் வயல்களுக்கு மத்தியில் கண்மாய் கரையை ஒட்டி தனியே அமைந்துள்ளதால் மாலை 3 மணிக்குள் கோயில் பூட்டப்பட்டு விடும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி   கோயில் கருவறையின் கதவுகள் உடைக்கப்பட்டு நல்லதங்காள் சிலை சுக்கு நூறாக உடைத்து நொறுக்கப்பட்டு  கிடந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் .இந்த சம்பவத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.   இந்த நிலையில் அர்ச்சனாபுரம் கிராம மக்கள் சார்பாக செய்யப்பட்டுள்ள நல்லதங்காள் சிலையை கோயிலில் வைக்க அனுமதி வழங்காத இந்து சமய அறநிலையத்துறை கண்டித்து வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் ஊர் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது புதிதாக செய்யப்பட்டுள்ள நல்லதங்காள் சிலையை கோயிலில் வைக்க இந்து சமய அறநிலை துறை அனுமதி வழங்க வேண்டும், கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News