அரசு விளையாட்டு விடுதயில் உணவு சாப்பிட்ட 31 மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதி.
உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி ஆய்வு நடத்தி மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு.;
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மகளிர் விடுதியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 61 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர் இந்த நிலையில் நேற்று காலை நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் விடுதி மாணவிகள் 5 பேருக்கு அடுத்தடுத்து வாந்தி, தலைவலி ஏற்பட்டுள்ளது, இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவிகளை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள பள்ளி மாணவிகள் விளையாட்டு விடுதிக்கு அனுப்பி வைத்தனர்இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறையினர், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விளையாட்டு விடுதியில் உள்ள உணவு கூடம், சமையல் கூடத்தில் ஆய்வு செய்து குடிநீர், உணவு மாதிரிகளை சேகரித்து பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்த ஆய்வில் மாணவிகள் நேற்று முந்தினம் ( 19.01.26) இரவு சிக்கன் உணவும், அடுத்த நாள் காலையில் கிச்சடி உணவு சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு சென்றது தெரியவந்துள்ளது.இந்த நிலையில் விளையாட்டு விடுதியில் தங்கியிருந்த மீதமுள்ள 26 மாணவிகளுக்கு வாந்தி, தலைவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதால் மாணவிகளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், தற்போது 31 மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல சிகிச்சை உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது