குறைதீர் கூட்டத்தில் 380 கோரிக்கை மனுக்கள்

மனுக்கள்;

Update: 2025-07-08 03:21 GMT
கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், 380 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் பிரசாந்த தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார் தொடர்பான மனுக்களை பெற்று விசாரணை நடத்தி உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.வருவாய் துறை, வேளாண்மை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் குடிநீர் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 380 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில், டி.ஆர்.ஓ., ஜீவா, சமூக பாதுகாப்பு திட்ட தனி சப்கலெக்டர் சுமதி உட்பட துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Similar News