கூம்பு வடிவ ஒலிபெருக்கியை சேதப்படுத்திய 4 பேர் மீது வழக்கு

குளித்தலை போலீசார் வழக்கு பதிவு

Update: 2024-09-07 04:41 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நெய்தலூர் காலணியை சேர்ந்தவர் கோகுல் (24). இவர் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைக்க ஊர்க்காரர்களுடன் ரேடியோ செட் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மணிவேல், லட்சுமணன், பிரசாந்த், ஸ்டீபன் ராஜ் ஆகிய 4 பேரும் எங்களைக் கேட்காமல் சிலை எப்படி வைக்கலாம் என அங்கிருந்த கூம்பு வடிவ ஒலிபெருக்கியை உடைத்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கோகுல் அளித்த புகாரின் பேரில் 4 பேர் மீது குளித்தலை போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News