விநாயகர் சதுர்த்தி விழாவில் தகராறு , 4 பேர் படுகாயம்

4 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு

Update: 2024-09-10 04:48 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் குடித்தெருவை சேர்ந்தவர் ராகுல் (26). இவர் நேற்று முன்தினம் ராஜேந்திரம் சிவன் கோவில் அருகே விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஊர்வலமாக வந்துள்ளனர். இதை அப்பகுதியைச் சேர்ந்த தனுஷ், பிரபு, மணி, ஜெகதீஷ் ஆகிய 4 பேரும் கத்தி, இரும்பு கம்பி, கல் , கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் ராகுல், முகேஷ், ஏழுமலை காயம் அடைந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று கரூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின் பேரில் 4 பேர் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.

Similar News