கேர்மாளம் அருகே 4 நாட்களாக மின்சாரம் என்று இருளில் மூழ்கி 50 மலைக்கிராமங்கள்

கேர்மாளம் அருகே 4 நாட்களாக மின்சாரம் என்று இருளில் மூழ்கி 50 மலைக்கிராமங்கள்

Update: 2024-07-24 11:20 GMT
தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் திங்களூர் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு சத்தியமங்கலம் ராஜா நகர் பகுதியில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கேர்மாளம் போட்டி திங்களூர் கோட்டமாளம் குழியாட மாவள்ளம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு மின்சார விநியோகம் தடை பட்டுள்ளது இதனால் மலைகிராம மக்கள்பெரும் அவதிப்பட்டு வருகின்றனர் இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது மின்சாரம் இல்லாததால் கடந்த நாலு நாட்களாக செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்ற முடியவில்லை அதனால் அவசர தேவைக்கு கூட யாரை மறைக்க முடியவில்லை மின்விளக்குகள் வெளிச்சமின்றி இருப்பதால் வனவிலங்கு ஊருக்குள் நுழைந்து விடுகின்றனர் மாதத்தில் 15 நாட்களுக்கு மின்சாரம் இருப்பதில்லை இதனால் மாணவ மாணவிகள் படிக்க முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர் கடந்த நாலு நாட்களாக தொடர்ந்து மின்சாரம் இல்லை இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை சத்தியமங்கலத்தில் இருந்து கேர்மாளம் வரை உள்ள மின்கம்பிகள் பழுது அடைந்து விட்டதாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக பழுதடைந்த மின் கம்பிகளை அகற்றிவிட்டு புதிய மின் கம்பிகள் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்

Similar News