சௌராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் சங்க 45 ஆம் ஆண்டு விழா

மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் பரிசுகள் வழங்குதல் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன

Update: 2024-09-01 02:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள சௌராஷ்ட்ரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவிகள் சங்க 45ம் ஆண்டு விழா தலைவர் ஜனரஞ்சனி பாய் தலைமையில் உப தலைவர் விஜயலட்சுமி ராமச்சந்திரன்,பொருளாளரும் பள்ளியின் தலைமையாசிரியையுமான ராஜேஸ்வரி, காரியதரிசிகள் மகேஸ்வரி, அவந்திகாபாய், மேகலா ராணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பெண் தொழில் முனைவோர் விஷ்ணுபிரியா கலந்துகொண்டு சிறப்பித்தார். முன்னாள் மாணவிகள் சங்க 45 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிகளை கௌரவித்து பாராட்டு வழங்கும் நிகழ்ச்சியும் விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன.இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியைகள் மாணவிகள் முன்னாள் மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Similar News