மயிலாடுதுறை அருகே 5ஆம் தேதி மின் நிறுத்தம்

மயிலாடுதுறை அருகே பெரம்பூர் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வரும் 5ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்னிறுத்தம்

Update: 2024-09-03 12:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற் பொறியாளர் விடுக்கும் செய்திக் குறிப்பு. பெரம்பூர் துணைமின் நிலையத்தில் வரும் 05.09.2024 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் பெரம்பூர் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் பெரம்பூர், கடக்கம், கிளியனூர், சேத்தூர், முத்தூர், எடக்குடி, பாலூர், கொடைவிளாகம், ஆத்தூர் ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Similar News