ஒரே காரில் 5 பேர் பிணமாக மீட்கப்பட்டது பெறும் பரபரப்பு!

நிகழ்வுகள்

Update: 2024-09-25 04:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நமணமுத்திரம் என்ற இடத்தில் செட்டியார் இனத்திற்கு சொந்தமான சிவமடம் என்ற திருமண மண்டபம் ஒன்று உள்ளது. இந்த மண்டபத்தின் வாசலில் கார் ஒன்று அதிகாலையில் நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் அதிலிருந்து யாரும் இறங்கவில்லை இதனால் சந்தேகம் அடைந்த அந்த மடத்தின் வேலை பார்க்கும் வேலை ஆள் இது குறித்து பார்க்கும் பொழுது 5 பேர் உள்ளே மயங்கி கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக நமண சமுத்திரம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார் தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை பார்க்கையில் ஐந்து பேரும் காருக்குள்ளேயே இறந்து கிடந்தது தெரிய வந்தது உடனடியாக காவல்துறையினர் அங்கு முற்றுகையிட்டு அவர்கள் யார் எங்கிருந்து வந்தார்கள் என்று விசாரணை செய்ததில் அவர்கள் சேலம் மாவட்டத்தில் இருந்து வந்திருப்பதாகவும் பல்வேறு கோவில்களுக்கு சென்று விட்டு பேரையூர் கோயிலுக்கும் சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்புகையில் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிய வருகிறது. என்ன பிரச்சனை ஏதேனும் கடன் தொல்லையா அல்லது மிரட்டலா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அந்த ஐந்து பேரும் உடல்களை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தற்பொழுது கொண்டு செல்லப்பட்டுள்ளனர், ஒரே காரில் 5 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Similar News