சேவல் சண்டை நடத்திய 5 பேர் சிக்கினர்

பங்கம் பாளையம் அருகே சேவல் சண்டை நடத்திய 5 பேரை ஊதியூர் காவல் துறையினர் கைது செய்தனர்;

Update: 2025-07-25 11:49 GMT
ஊதியூரை அடுத்த பங்காம்பாளையம் பகுதியில் சிலர் சேவல் சண்டை நடத்தி சூதாட்டம் நடத்துவதாக காங்கேயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் நேற்று காங்கேயம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது அங்கு சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடு பட்ட நாகராஜ் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.7,600 மற்றும் 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News