லாரி உரிமையாளர் சங்க 50ம் ஆண்டு பொன்விழா அமைச்சர்கள் பங்கேற்பு

சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 50 ம் ஆண்டு பொன்விழா அமைச்சர்கள் பங்கேற்பு....

Update: 2024-07-28 14:35 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 50 ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி சங்ககிரியில் நடைபெற்றது. சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 50 ம் ஆண்டு பொன்விழா சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லூரி வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு பொன் விழா கல்வெட்டை திறந்து வைத்து பொன்விழா மலரை வெளியிட்டு உரையாற்றினர். விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசும் பொழுது, வாகனங்களில் பதிவை ஆன் லைனில் மூலமாக செய்வதில் ஏற்படும் சிரமங்களை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண நடவடிக்கை எடுத்து வருகிறார்.. அதற்கு போக்குவரத்து துறை மிகவும் உதவியாக இருக்கும் என்றும் இந்த துறைக்கு தேவையான உதவிகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, லாரி உரிமையாளர்களின் கோரிக்கை நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு பொருளாதாரத்தில் சிறப்பாக உள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணங்களில் லாரி உரிமையாளர்களும் ஒன்று என்று பெருமையோடு பேசிய அவர், பொருளாதாரம் மேம்பட லாரி உரிமையாளர்களின் பங்கு அதிக அளவில் இருப்பதால் அவர்களின் கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் நிச்சியம் நிறைவேற்றுவார் என்று பேசிய அவர், கலைஞர் முதலமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் உள்ள பணி சுமையை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டார் என்றும், இந்த பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் விவசாயம், முட்டை உற்பத்தி, லாரி தொழில் என பல்வேறு தொழில் கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டு உள்ளதாகவும் இதில் உள்ள பிரச்னைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லாரி உரிமையாளர்களுக்கு தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என்றார். விழாவில் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பசுமை அமைப்பினர் சார்பில் அனைவருக்கும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. அப்போது சேலம் தொகுதி எம்பி டி.எம்.செல்வகணபதி உட்பட திமுக நிர்வாகிகள் லாரி உரிமையாளர்கள் அசோக் லைலேண்ட், கல்ப் ஆயில் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் மேலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Similar News