சூலூர்: டிப்பர் லாரி மோதி 6 வயது சிறுவன் பலி !

சாலை கடக்க முயன்ற சிறுவன் மீது டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாப மரணம்.;

Update: 2025-10-15 03:13 GMT
கோவை மாவட்டம் சூலூர் அருகே சின்னியம்பாளையத்தில் சாலையை கடக்க முயன்ற ஆறு வயது சிறுவன் மீது டிப்பர் லாரி மோதியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். பாலகிருஷ்ணனின் மகன் ஹட்சன் (6) மாலை கடைக்கு சென்று வீடு திரும்பியபோது, அவிநாசி சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. உடனே மீட்டவர்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பியபோதும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து டிப்பர் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News