ரூபாய் 9 லட்சம் மதிப்பில் கலையரங்கம் திறப்பு
சிங்கம்புணரி அருகே கலையரங்கத்தை அமைச்சர் திறந்து வைத்தார்;
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், ஏரியூர் ஊராட்சிக்குட்பட்ட இ.வலையபட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.09.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினை இன்றையதினம் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கா.வானதி உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்