புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இடத்திற்கு நேரடியாக சென்ற மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உடன் இருந்த அதிகாரிகளுக்கு இன்று காலை டிஆர்ஓ இராஜராஜன் உத்தரவிட்டார்.