போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி நெரிசல் மிகுந்த சாலையை கடக்கும் பாதசாரிகளை ஊக்குவிக்கும் வகையில் இனிப்பு வழங்கிய Traffic DC வனிதா*

மதுரை பெரியார் பேருந்து நிலையம் போக்குவரத்து சிக்னலில் நடைபெற்றது

Update: 2024-08-29 01:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் வாகன போக்குவரத்து அதிகரிப்பால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு பாதசாரிகள் சாலையை கடக்க முடியாமல் மிகுந்த சிரமபட்டு வருகின்றனர். எனவே பாதசாரிகள் சாலையை எளிதில் கடக்கும் வகையிலும் சிரமமின்றி நடந்து செல்லும் வகையில் போக்குவரத்து காவல் துறை பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் காவல்துறை வழிகாட்டுதலின்படி போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி சாலையை கடக்கும் பாதசாரிகள், வாகன ஒட்டிகளுக்கு போக்குவரத்து துணை ஆணையர் வனிதா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியும், அறிவுரை வழங்கியும் இனிப்பு மற்றும் பழங்கள் கொடுத்து ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்வில் உதவி ஆணையர்கள் இளமாறன்,செல்வின், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தங்கமணி,பூர்ணகிருஷ்ணன்,நந்தகுமார் உட்பட காவல் துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Similar News