டிப்பர் லாரி மோதிய விபத்தில் 5 பேரில் ஒருவர் உயிரிழப்பு !

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2024-04-01 05:18 GMT

விபத்து

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே டிப்பர் லாரி மேதி, ஒருவர் உயிரிழப்பு ஆட்டோவில் இருந்த நான்கு பேர்காயம், 4 ஷேர் -ஆட்டோக்கள் சேதம். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்கா . அசூர் கிழக்கு தெருவை, சேர்ந்த முருகேசன் மகன் சூர்யா வயது 20 இவர் தனியார் கல்லூரியில்பொறியியல் படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் மேலும் இவர் அவ்வப்போது ஓட்டுநர் வேலை செய்து வரும் நிலையில் டிப்பர் லாரியில் 4 ரோடு அருகில் உள்ள, சூர்யா ஏஜென்சில் ஜல்லி ஏற்றிக்கொண்டு ஆலம்பாடி நோக்கி சென்று கொண்டுள்ளார் அப்போது புதிய பேருந்து நிலையம் பகுதியில் செல்லும் போது, டிப்பர் லாரியை கவனக்குறைவாகஒட்டி சென்றதால், ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் உணவு விடுதி முன்பு நின்று கொண்டிருந்த பெரம்பலூர் கேந்திர வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் , உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அன்மோல் ஜூனோஜாவின், - 31, என்பவர் மீது மோதியது இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . மேலும் டிப்பர் லாரி சாலை அருகில் வரிசையாக நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோக்கள் மீதும் மோதியதில் தொடர்ந்து 4 ஆட்டோக்கள் சேதமடைந்தது இதில் ஒரு ஆட்டோவில் அமர்ந்திருந்த, திருவிளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் 35, பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் ரசிக்கும் பிரியா - 18 மேலும் பெரம்பலூர் திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் - 80, கருப்பாயி ஆகிய நான்கு பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது, உடனே அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற பெரம்பலூர் போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, டிப்பர் லாரி ஓட்டிச் சென்ற சூர்யாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News