10 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிர் இழப்பு!

விபத்துச் செய்திகள்

Update: 2024-09-01 13:55 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை அருகே திருவரங்குளம் ஒன்றியம் நடு இம்னாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் சுகந்தன் காலை 6 மணி அளவில் வயலுக்குச் சென்ற பொழுது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வயலுக்குச் சென்ற சிறுவன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், வயலுக்குச் சென்று பார்த்தபோது சிறுவன் மோட்டார் அறை வாசலில் விழுந்து கிடந்துள்ளார். கணேஷ் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News