317 நபர்களுக்கு பணி ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 317 நபர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.

Update: 2024-09-21 13:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் மகேந்திரா கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் இன்று மாவட்ட ஆட்சியர் நகரமைப்பு திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் முன்னிலையில் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார். நாமக்கல் மாவட்ட நிர்வாகம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், தையற்பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டனர். இம்முகாமில் 113 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன. சுமார் 2103 படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றனர். அவர்களில் தேர்வான 317 நபர்களுக்கு பணி ஆணைகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வார் பாதுகாப்பு அலுவலர் த.முத்துராமலிங்கம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பொ.மா.ஷிலா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News