காங்கேயத்தில் பால்வினை தொற்று குறித்த விழிப்புணர்வு

காங்கேயத்தில் பால்வினை தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-09-21 14:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு எச்.ஐ.வி. மற்றும் பால்வினை தொற்று குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. கருத்தரங்கத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி அனுராதா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி விமலாதேவி முன்னிலை வகித்தார். அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சுகவாழ்வு மைய ஆலோசகர் கருப்புசாமி வரவேற்றார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அழகு மாவட்டம் மேற்பார்வையாளர் சிவகுமார் கருத்துரை வழங்கினார். மாவட்ட காசநோய் ஒருங்கிணைப்பாளர் கணேசன் சிறப்புரை ஆற்றினார். காங்கேயம் வட்டார காசோநோய் மேற்பார்வையாளர் ஜெகதீஷ் நன்றியுரை கூறினார்.

Similar News