10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் 2 பேர் மீது வழக்கு 

மார்த்தாண்டம் அருகே

Update: 2024-10-13 13:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டம் மார்த்தாண்ட அருகே புரவூர் கூக்கவிளை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி தமிழக - கேரளா எல்லை பகுதியான காரக்கோணம் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.        இந்த நிலையில் மாணவி பள்ளியில் நடந்த பாலியல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டார். கருத்தரங்கில் கேள்வி கேட்கும் சமயத்தில் மாணவி ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது தனது உறவினர் மணியன் மகன்களான பிரேமன் ( 29 , அனீஸ் ( 31) ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கருத்தரங்கு நடத்தியவர்கள் இது தொடர்பாக கேரள மாநில குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.         அவர்கள் இது குறித்து மாணவியின் தாயிடம் கூறினர். இதனை கேட்டு அதிர்ந்து போன மாணவியன் தாய் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வாலிபர்கள் ரெண்டு பேர் மீதும் போச்சோ பிரிவில்  வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News