ரத்தன் டாடா தூத்துக்குடி வருகை : வைரலாகும் புகைப்படம்!
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தூத்துக்குடிக்கு வருகை தந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைலாகி வருகிறது.
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தூத்துக்குடிக்கு வருகை தந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைலாகி வருகிறது. டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86). இவர் வயது முதிர்வு காரணமாக சமீபத்தில் காலமானார். இவர் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர். பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர். 2012-ல் ஓய்வு பெற்றார். இதன் பின்னர் அவர் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வந்தார். இந்நிலையில், ரத்தன் டாடா கடந்த 1979ஆம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள O.T.N.V. DHEENADAYALAN & BROS கடைக்கு வருகை புரிந்தார். அப்போது அவர் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைலாகி வருகிறது.