உதகை மஞ்சன கொறை பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை  CCTV காட்சி வைரல் ...

உதகை மஞ்சன கொறை பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை  CCTV காட்சி வைரல் ...

Update: 2024-10-18 06:07 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
உதகை மஞ்சன கொறை பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை  CCTV காட்சி வைரல் ... வளர்ப்பு நாயை கவ்வி பின்பு விட்டு சென்ற காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .. கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை ... நீலகிரி மாவட்டம் உதகை சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை கரடிகள் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்துள்ளது உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சிறுத்தைகள் வீட்டில் வளர்க்கும் நாய் பூனை வாத்து உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வேட்டையாடி செல்கின்றன இந்நிலையில்  நேற்று இரவு உதகை அடுத்த மஞ்சனகொறை பகுதியில் சிறுத்தை உலா வந்தது அங்கு ஒருவர் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது மேலும் வளர்ப்பு நாயை கவ்வி , பின்பு அங்கே சென்றது விட்டு சென்றது இந்த காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர் எனவே உதகை மற்றும் மஞ்சனகொறை அதன் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்படுவதால் வனத்துறையினர் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை, கரடி நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News