வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 10 லட்சம் மோசடி

சிவகாசியில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 10 லட்சம் மோசடி செய்த கும்பலின் தலைவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-10 11:43 GMT

சிவகாசியில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 10 லட்சம் மோசடி செய்த கும்பலின் தலைவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.


சிவகாசி அருகே துணிகரம்,வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.10 லட்சம் மோசடி 4பேர் கைது... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு ஏஜென்டிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.10 லட்சம் மோசடி செய்த 4பேரை போலீசார் கைது செய்தனர்.சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ராமச்சந்திரா புரத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் (வயது45) பட்டாசு ஏஜென்ட்டாக உள்ளார். இவரிடம் தாயில்பட்டி கோட்டையூரைச் சேர்ந்த கருப்பசாமி (55),சாத்தூர் அருகே இருக்கன்குடியைச் சேர்ந்த ரமேஷ் ( 38 ),சாத்தூர் அருகே வேப்பிலைபட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் ( 40 ),கார் டிரைவர் சாத்தூர் அருகே இராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் (47) ஆகியோர் கடந்த 6 ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து ரூ.10 லட்சம் வாங்கியுள்ளனர்.கடந்த மூன்று நாட்களாக கூடுதலாக 10 லட்சம் கேட்டு சௌந்தரராஜனை மிரட்டி வந்துள்ளனர்.இது குறித்து சிவகாசி டிஎஸ்பி அலுவலகத்தில் சௌந்தரராஜன் புகார் கொடுத்துள்ளார்.இந்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து உள்ளனர்.(குறிப்பு கைது செய்யப்பட்ட கருப்பசாமி தாயில்பட்டி கோட்டையூர் கிளை பிரதிநிதியாகவும் ரமேஷ் சாத்தூர் திமுக இளைஞரணி நிர்வாகியாகவும் உள்ளனர்.
Tags:    

Similar News